மனைவியை மண்வெட்டியால் சராமரியாக அடித்துக் கொன்ற கணவன் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்

shocking news wife husband fight wife murder
By Nandhini Jan 27, 2022 07:36 AM GMT
Report

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலைச் சேர்ந்தவர் வீராச்சாமி. இவருடைய மனைவி அன்னலெட்சுமி. இவர்களுக்கு தயாநிதி, வித்திஷ் ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், அன்னலெட்சுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் அறிந்த கணவர் வீராச்சாமி மனைவி அன்னலெட்சுமியை கண்டித்திருக்கிறார். இதனையடுத்து, கணவன் கண்டிக்க ஆரம்பித்தால் அன்னலெட்சுமி தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார்.

இதனால் விரக்தியடைந்த வீராச்சாமி தனது 2 மகன்கள் மற்றும் மாமனார், மாமியாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அன்னலெட்சுமி, கள்ளக்காதலனுடன் நேற்று தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர்களிடம் செலவுக்கு பணம் கேட்டிருக்கிறார். அந்த சமயம் வீராச்சாமியும் அங்கிருந்ததால் அவருக்கும், அன்னலெட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வீராச்சாமி, மண்வெட்டியால் அன்னலெட்சுமியை சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அன்னலெட்சுமி கீழே சரிந்து உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வீராச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.