3 மாத கர்ப்பிணி பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்த கொடூர கணவன் - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

Attempted Murder
By Nandhini Apr 30, 2022 08:11 AM GMT
Report

தெலுங்கானா, நிஜாமாபாத் மண்டலம், மல்காபூர் தாண்டாவைச் சேர்ந்தவர் தருண். இவருடைய மனைவி கல்யாணி.

இந்நிலையில், கல்யாணி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். கல்யாணி அழகாக இல்லை என்று தருண் அடிக்கடி வரதட்சனை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்குள்ளும் 3 மாதமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

தருண் மட்டுமல்லாமல், தந்தை பக்கிரா மற்றும் சகோதரன் பிரவீன் ஆகியோரும் கல்யாணிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஈவு இரக்கமின்றி கல்யாணியை கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிட் எடுத்து குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி துன்புறுத்தியிருக்கிறார் தருண். ஆசிட்டை குடித்த கல்யாணி அலறி துடிதுடித்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

உடனே, கல்யாணியை அவர்களிடமிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி கல்யாணி உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தருண், தந்தை பக்கிரா மற்றும் சகோதரன் பிரவீன் ஆகிய 3 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கர்ப்பிணி பெண்ணை ஆசீட் குடிக்கச் சொல்லி சாகடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

3 மாத கர்ப்பிணி பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்த கொடூர கணவன் - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம் | Murder