விஜய் பட பாணியில் சோதனை - சிசிடிவியால் சிக்கிய காவலர்கள் சஸ்பெண்ட்

Maharashtra Mumbai
By Karthikraja Sep 01, 2024 05:35 AM GMT
Report

போக்கிரி பட பாணியில் சோதனையில் ஈடுபட்ட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கர் காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு துணை ஆய்வாளர் மற்றும் 3 கான்ஸ்டபிள், டேனியல் என்ற வாலிபரை அழைத்து சோதனை செய்கின்றனர். அப்போது இரு காவலர்கள் அவரை சோதனை செய்ய மற்ற இருவர் அருகில் நின்று சோதனையை மேற்பார்வையிடுகின்றனர். 

mumbai police planting drug on man cctv video

சோதனை செய்யும் போது டேனியலின் பேன்ட் பாக்கெட்டில் போதை பொருளை காவலர் வைக்கும் அச்செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வீடியோ

இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை நடைபெற உள்ளதாக காவல்துறை துணை ஆணையர் ராஜ் திலக் ரூஷன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய டேனியல், முதலில் தன்னை போதை பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டினர். அதன் பின் அவர்களின் செயல் சிசிடிவியில் பதிவானதை அறிந்து என்னை விடுவித்தனர் என கூறினார். 

விஜய் நடித்த போக்கிரி படத்தில் விஜய்யை சோதனை செய்யும் காவலர், சோதனையின் போது அவரது பேன்ட் பாக்கெட்டில் போதை பொருளை வைக்கும் கட்சி இடம் பெரும். அதே போன்ற சம்பவம் தற்போது மும்பையில் நடந்துள்ளது.