கர்ப்பமாக்கிய 60 வயது தாத்தா; சிறுமி வாக்குமூலம் - விடுதலை செய்த நீதிமன்றம்!

Maharashtra Crime
By Sumathi Sep 12, 2023 07:59 AM GMT
Report

சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் 60 வயது முதியவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

மும்பையை சேர்ந்த சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், திடீரென் அவர் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.

கர்ப்பமாக்கிய 60 வயது தாத்தா; சிறுமி வாக்குமூலம் - விடுதலை செய்த நீதிமன்றம்! | Mumbai Old Man Acquitted In Girl Rape Case

தொடர்ந்து குழந்தையும் பிறந்தது. இதற்கிடையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரித்ததில், சிறுமி முதலில் ஒரு சிறுவனுடன் ஏற்பட்ட உறவு காரணமாக கர்ப்பம் தரித்ததாக கூறியுள்ளார்.

 விடுதலை

அதன்பின், தனது தாத்தா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முதியவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால், முதியவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது. இது தொடர்பான தீர்ப்பில், “விசாரணையின்போது சிறுமி வெவ்வேறு கட்டத்தில் வெவ்வேறு பெயர்களை கூறியுள்ளார்.

அவரின் வாய்வழி ஆதாரம் நம்ப தகுந்ததாக இல்லை. அதற்கு சாட்சியும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.