ருசி வித்தியாசத்தை உணர்ந்த நபர்; கோழிக்கறிக்குள் கிடந்த எலிக்கறி - பிரபல ஹோட்டலின் அலட்சியம்!
உணவில் எலி கிடந்த விவகாரத்தில் ஹோட்டல் மேலாளர் மற்றும் சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவில் எலி
மும்பை; அனுராக் சிங் என்ற நபரும் அவரது நண்பர் அமீனும் கடந்த ஆகஸ்ட் 13 அன்று இரவு மேற்கு பாந்த்ரா,பாலி நாகா என்ற இடத்தில் உள்ள பஞ்சாபி உணவு வழங்கும் பிரபல 'பாப்பா பஞ்சோ டா தாபா' என்ற உணவகத்திற்குச் சென்றார்.
அங்கு அவர்கள் இரண்டு உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். ஒரு ஆட்டிறைச்சி கறி மற்றும் ஒரு கோழிக்கறியை ஆர்டர் செய்துள்ளனர். உணவு வந்ததும் இருவரும் உணவை சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.
கறியில் உள்ள இறைச்சியின் ஒரு பகுதியை மென்று சாப்பிட்ட பிறகு, அதன் ருசி வித்தியாசமாக இருந்துள்ளது. கூர்ந்து கவனித்தபோதுதான் அது செத்த எலி என்று அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
மேலாளர் கைது
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ஹோட்டல் மேலாளர் மற்றும் சமையல்காரர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் 'உணவில் செத்த எலி கிடந்ததை குறித்து ஹோட்டல் மேலாளரிடம் புகார் அளித்தபோது.
மேலாளர் திருப்திகரமான பதில்களை அளிக்கவில்லை. மேலும் இதனால் தான் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மருத்துவமனை செல்ல வேண்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் உணவகத்தின் மேலாளர் (விவியன் செக்வேரா) மற்றும் சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாந்த்ரா காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் சஞ்சய் மராத்தே தெரிவித்தார்.