டூவைன் பிராவோவை ஓரம் கட்டிய சென்னை அணி - முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரில் இன்றைய நாளுக்கான முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாய் அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
அதே வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த டூவைன் பிராவோ இன்றைய போட்டியில் விளையாடவில்லை, அவருக்கு பதிலாக சாம் கர்ரான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;
டூபிளசிஸ், ருத்துராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஸ் ஹசில்வுட்.
இன்றைய போட்டிக்கான கொலக்த்தா நைட் ரைடர்ஸ் அணி;
சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரியூ ரசல், சுனில் நரைன், லோகி பெர்குஷான், வருண் சக்கரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா