வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது : விடைபெற்ற தோனி

MS Dhoni IPL 2022
By Irumporai May 23, 2022 10:34 AM GMT
Report

ஐபிஎல் 2022 தொடரில் ஏமாற்றத்துடன் முடிந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் அடுத்த ஐபிஎல் தொடரில் எழுச்சி பெறும் நம்பிக்கையுடன் விமானம் ஏறினார்.

ஐபிஎல் 2022 தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்காமல் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயோபபுளிலிருந்து வெளியே வந்து ஊர் திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு வந்தார்.

14 போட்டிகளி 4-ல் மட்டுமே வென்று ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக மட்டுமே பிளே ஆப் தகுதி பெறாமல் வெளியேறியது தோனி படை, கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக போராடி தோற்றது சிஎஸ்கே.

வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது   : விடைபெற்ற தோனி | Ms Dhoni Spotted After Leaving Ipl 2022

ஆனால் சிஎஸ்கேவுக்கும் தோனியின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி என்னவெனில் அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவர் ஆடுகிறார் இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 232 ரன்கள் எடுத்த தோனி 123 % ஸ்டரைக் ரேட் வைத்துள்ளார் 10 சிச்கர்களை அடித்துள்ளார்.

வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது   : விடைபெற்ற தோனி | Ms Dhoni Spotted After Leaving Ipl 2022

சென்னை ரசிகர்களுக்கு நேரில் குட் பை சொல்வது போல் வருமா என்று கூறிய தோனி சென்னையில் ஆடாதது குறித்து ஏமாற்றமாக உணர்ந்தார் ஐபிஎல் தொடரில் 2021 ஐபிஎல் தொடர் உட்பட 4 கோப்பைகளை வென்றுள்ளார்.