அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - எம்.எஸ். தோனிக்கு அழைப்பு!
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
கும்பாபிஷேகம்
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
தோனிக்கு அழைப்பு
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தோனியின் ராஞ்சி இல்லத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை மாகாண செயலாளர் தனஞ்சய் சிங், அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அப்போது பாஜகவின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கர்மவீர் சிங்கும் உடனிருந்தார்.