புதிய துறையில் கால்பதித்த தோனி - இனி இதுல மட்டும்தான் கவனமாம்!
இந்திய ட்ரோன் நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் பிராண்ட் அம்பாசிடராக எம்.எஸ்.தோனி மாறியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது இந்திய ட்ரோன் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸின் பங்குதாரராக மாறியுள்ளார்.
கருடா ஏரோஸ்பேஸ்
ட்ரோன்களை பயன்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்நிறுவனத்தில் தோனி முதலீடு செய்து இருக்கிறார். ஐபிஎல் 2022க்குப் பிறகு கிரிக்கெட்டை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்த தோனி தொடர்ந்து அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.
ஆடை, மதுபானம் மற்றும் விவசாயம் என பல்வேறு தொழில்களில் தோனி ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகிறார். இந்த தொழில்களிலிருந்து சற்று மாறுப்பட்ட தொழிலான ஆளில்லா விமானங்கள் மூலம் விவசாயத்தை மேம்படுத்தும் முயற்சியில் முதலீடு செய்து இருக்கிறார்.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்தது குறித்து தோனி கூறுகையில், கருடா ஏரோஸ்பேஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவர்கள் வழங்கும் தனித்துவமான ட்ரோன்களுடன் அவர்களின் வளர்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இவர் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், நான் எப்போதும் எம்.எஸ் தோனியின் தீவிர ரசிகர் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் குடும்பத்தில் அவரும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் கண்ட கனவு நனவாகிவிட்டது.
மஹி என்பது அர்ப்பணிப்பின் உருவம் மற்றும் எங்கள் கூட்டணியில் இந்த கேப்டன் இருப்பது மிகப்பெரிய மதிப்பைச் சேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், இது எங்களை சிறப்பாகச் செயல்படத் தூண்டும் என்று கூறினார்.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan
