தல போல வருமா..தோனி இல்லாம சிஎஸ்கேவே கிடையாது ஸ்ரீனிவாசன் அதிரடி பேச்சு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறுவனர் மற்றும் இந்தியன் சிமென்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரரான N.ஸ்ரீனிவாசன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சிஎஸ்கே மற்றும் தோனி குறித்து பேசியுள்ளார்.
2021 ஐபிஎல் தொடர் இனிதே முடிவடைந்த நிலையில் சென்னை அணி தனது நாலாவது டைட்டில் பட்டத்தை இந்த தொடரில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த தொடரோடு சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவித்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது மேலும் அடுத்த வருட ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இடம்பெற மாட்டார் என்றும் ஆங்காங்கே பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறுவனர் N.ஸ்ரீனிவாசன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிடையாது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லாமல் டோனி கிடையாது என்று தோனி நிச்சயம் 2022 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வெற்றிகரமாக அணியை வழிநடத்தி வருகிறார், மேலும் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான்குமுறை டைட்டில் பட்டத்தை வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்திய அணியில் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டு அனைத்து விதமான தொடர்களிலும் இந்திய அணிக்கு கோப்பை வெற்றி பெற்று கொடுத்தாரோ அதே போன்று ஐபிஎல் தொடரிலும் வெற்றிகர கேப்டனாக இன்றுவரை திகழ்ந்துவருகிறார்.
ட்ராபி கலெக்டர் என்று பெயர் சூட்டும் வகையில் பல கோப்பைகளை வெற்றி பெற்றுக் கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2021 உலக கோப்பை தொடரில் இந்திய அணி எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.