சிஎஸ்கே அணி பாராட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டம் வென்றது.
நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு, விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் குடும்பங்கள் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பிசிசிஐ தலைவர்,மற்றும் பிரபல முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விழா நடைபெறும் கலைவானர் அரங்கின் வெளியில் ஏராளமான சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் அளவில் குவிந்துள்ளனர்.