என்னுடைய கடைசி போட்டி சென்னையில் தான் - தோனி உருக்கம்
ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டம் வென்றது.
நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் தலைமையில் இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.அவருக்கு தோனியின் எண் 7 பொறிக்கப்பட்ட ஜெர்சி புகைப்படம் நினைவு பரிசாக கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய அவர் சென்னை மிகச் சிறந்த நினைவுகளை கொடுத்துள்ளது; தமிழ்நாடு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது என்றார் மேலும் பேசிய அவர்,எனது கடைசி போட்டி சென்னையில்தான் நடக்கும் என நினைக்கிறேன் என்று உருக்கமாக பேசினார்.