எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தென் மாநிலங்களுக்கு பாதிப்பு?

Delhi
By Sumathi May 30, 2023 07:12 AM GMT
Report

எம்.பிக்களின் இருக்கை எண்ணிக்கை 888 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது, வரும் காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். நாடாளுமன்றம், 552 பேருக்கு பதிலாக 888 எம்பிக்கள் அமரும் வகையில் கட்டடப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தென் மாநிலங்களுக்கு பாதிப்பு? | Mps In The New Parliament Building Will Increase

இந்தி பேசும் மாநிலங்களான சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட்டில் 42 சதவிகிதமாக இருக்கும் பிரதிநிதித்தும் 48 சதவிகிதமாக அதிகரிக்கும்.மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் பிரதிநிதித்துவம் 2.4 சதவிகிதமாக குறையும்.

பாதிப்பு? 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக என ஒட்டுமொத்த தென் இந்தியாவின் பங்கு வெறும் 165 இடங்களாக குறையும். எம்பி தொகுதிகளின் அதிகரிப்பு பாஜகவிற்கே சாதகமாக முடியும் எனவும்,

எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தென் மாநிலங்களுக்கு பாதிப்பு? | Mps In The New Parliament Building Will Increase

இந்தி பேசும் மாநிலங்களுக்கு நன்மை ஏற்படும், தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது பாஜகவே பிரதான கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.