குளித்த சகோதரிகளை படம் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் - அதிர்ச்சி தகவல்!

sexual abuse madhyapradesh
By Anupriyamkumaresan Jul 18, 2021 11:49 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

 மத்திய பிரேதசத்தில் பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதை படம் பிடித்து ப்ளாக் மெயில் செய்து பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பதம்பூர் கெரியா பகுதியில் அங்கித் ஜாதவ் என்ற 20 வயதான வாலிபர் வசித்து வந்தார் .அந்த வாலிபரின் பக்கத்து வீட்டில் இரண்டு சகோதரிகள் வசித்துவந்தனர் .

குளித்த சகோதரிகளை படம் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் - அதிர்ச்சி தகவல்! | Mp Abuse Case Arrest

அந்த சகோதரிகள் மீது ஜாதவ்க்கு ஒரு தலையாக காதல் கலந்த காமம் இருந்துள்ளது. இந்த நிலையில் ஒரு நாள், அந்த பெண்களில் ஒருவர் மட்டும், அவர்களில் வீட்டில் குளித்து கொண்டிருந்தபோது, ஜாதவ் தன்னுடைய வீட்டு மாடியிலிருந்து குளிப்பதை படம் பிடித்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, சகோதரிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை தாங்காத சகோதரிகள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை அடுத்து ஜாதவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.