ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!

Government Of India
By Thahir May 13, 2022 05:46 PM GMT
Report

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் சேக் கலீஃப்பா மறைவை அடுத்து இந்தியாவில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும்,அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் நஹ்யான் இன்று காலமானார்.அவருக்கு வயது 73. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இருந்து வந்தார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த அதிபர் ஷேக் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு இந்திய பிரதமர் உள்பட பல்வேறு நாட்டு முக்கியத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..! | Mourning Adjustment In India Tomorrow

அவரின் மறைவையொட்டி இந்தியாவில் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும்,அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய அரசு அறிவிப்பு.