வலியை புரிந்து... மனைவிக்கு மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்த பிச்சைக்காரர் - நெகிழ்ச்சி சம்பவம்
மத்திய பிரதேசம், சிந்த்வாரா மாவட்டம், அமர்வாராவைச் சேர்ந்தவர் (58). இவர் பிறக்கும்போதே இரு கால்கல் செயலிழந்து விட்டது. இவருக்கு முன்னி என்ற மனைவி உள்ளார்.
இவர் பல வருடங்களாக அந்தக் கிராமத்தில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு உதவி செய்யும் வகையில், முன்னி 3 சக்கர சைக்கிளில் அமர வைத்து அந்த கிராமம் முழுவதும் தள்ளிக் கொண்டு செல்வார்.
வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக முன்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், 3 சக்கர சைக்கிளை தள்ளுவதில் அவர் மிகவும் சிரமப்பட்டார். கொஞ்சம் தூரம் தள்ளினாலே அவருக்கு மூச்சுவாங்கியது.
இருந்தாலும், தன் கணவருக்காக சைக்கிளை தொடர்ந்து தள்ளி வந்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த சாஹு, அவருடைய கஷ்டத்தை புரிந்து, பிச்சை எடுத்து சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்திலிருந்து புதிய மொபட் ஸ்கூட்டரை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார்.
தற்போது, இத்தம்பதி, 3 சக்கர சைக்கிளில் செல்வதற்கு பதிலாக மொபட்டில் சென்று சென்று பிச்சை எடுத்து வருகிறார்கள்.
பிச்சைக்காரர் என்ற போதிலும், தனது மனைவியின் வலியை உணர்ந்து, தனக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தை பத்திரப்படுத்தி அவருக்கு மொபட் பைக் வாங்கிக் கொடுத்ததற்ககாக சாஹுவுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தற்போது இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.