20 ஆண்டுகளாக ஒரே தட்டில் சாப்பிட்டு வந்த பெண் - அப்படி என்ன இருக்கு அதுல?

Viral Photos Death
By Thahir Jan 30, 2023 05:39 AM GMT
Report

20 ஆண்டுகளாக ஒரு பெண் ஒரே தட்டில் சாப்பிட்டு வந்த நெகிழ்ச்சி சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 ஆண்டுகள் ஒரே தட்டில் சாப்பிட்ட அம்மா

நாம் அன்றாடம் உணவு தேவைகளுகக்காக பயன்படுத்தப்படும் தட்டுகள் மற்றும் பாத்திரங்கள் பழைமை அடைந்தவுடன் அதை துாக்கி எரிந்தவிடுவோம்.

இந்த நிலையில் பெண் ஒருவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தட்டில் சாப்பிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

mother-used-same-plate-for-20-years

இவர் ஒரே தட்டில் நீண்ட நாட்களாக ஏன் சாப்பிட்டு வந்தார் என்பது பற்றிய தகவலை அவரது மகன் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தங்களது வாழ்க்கையில் நடக்கும் சுராஸ்யங்கள், மகிழ்ச்சி, போன்ற நெகிழ்ச்சியான தருணங்களை தங்களது சமூக வலைத்தல பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் விக்ரம் புத்தநேசன் என்பவர் பதிவிட்டுள்ள பதிவு கண்கலங்க வைக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், இது என்னுடைய அம்மா சாப்பிடும் தட்டு, இதில் தான் அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாப்பிட்டு வந்திருக்கிறார். தட்டு சிறியதாக இருந்த போதும் அதை பயன்படுத்தி வந்துள்ளார்.

மகன் உருக்கம் 

அம்மாவை தவிர எனக்கும், என் சகோதரி ஸ்ருதிக்கும் மட்டுமே இதில் சாப்பிட அனுமதி இருக்கிறது. இதை தவிர இந்த தட்டை வேறு யாரும் பயன்படுத்த அவர் அனுமதிக்கமாட்டார். ஆனால் அவர் இறந்த பிறகு தான் இந்த தட்டு பற்றி எனக்கு தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போது இந்த தட்டு நான் பள்ளியில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் எனக்கு பரிசாக வழங்கப்பட்டது.

அதன் பிறகு 24 ஆண்டுகளாக அம்மா நான் வெற்றி பெற்ற இந்த தட்டில் மட்டும் தான் சாப்பிட்டு வந்திருக்கிறார். அதன் பிறகு 24 ஆண்டுகளாக அம்மா நான் வெற்றி பெற்ற இந்த தட்டில் மட்டும் தான் சாப்பிட்டு வந்திருக்கிறார்.

இதைப் பற்றி எனக்கு இவ்வளவு காலமாக தெரியவே இல்லை. அம்மாவும் என்னிடம் சொல்லவில்லை. அம்மாவை போன்ற ஒரு அன்பான இனிமையான பெண்மணியை பார்க்க முடியாது. மிஸ் யூ அம்மா’ என்று உருக்கமாக ட்விட்டர் இல் பதிவு செய்து அந்த தட்டின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.