மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்!

Tamil nadu Crime Ariyalur
By Jiyath Jan 25, 2024 09:56 AM GMT
Report

தனது மகளை கொன்ற மருமகனை, மாமியார் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகள் கொலை 

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (53). இவர் தனது மகள் பராசக்தியை (19) அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (26) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்! | Mother In Law Slashes Son In Law In Ariyalur

திருமணமான 3 மாதங்களில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தமிழரசன் மனைவி பராசக்தியை அடித்துக்கொன்றார்.

இந்த கொலை வழக்கில் கைதான தமிழரசன் 3 மாதங்களிலேயே வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

மருமகனுக்கு வெட்டு   

இந்நிலையில் தனது மகளை கொன்ற தமிழரசனை பழிவாங்க 3 மாதங்கள் காத்திருந்த சரோஜா, நேற்று முன்தினம் நள்ளிரவில் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து கையில் அரிவாளுடன் தமிழரசன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்! | Mother In Law Slashes Son In Law In Ariyalur

பின்னர் அங்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த தமிழரசனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவரது நடு மண்டை மற்றும் வலது கையில் வெட்டு விழுந்தது, இடது கை விரல்கள் துண்டிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் போலீசார் சரோஜாவை கைது செய்தனர்.

மேலும், அவர் பயன்படுத்திய அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தமிழரசன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.