3வது பிரசவத்திலும் பெண் குழந்தையை பெற்ற மருமகள் - ஆத்திரத்தில் தலை முடியை பிடித்து தாக்கிய மாமியார்..!
தொடர்ந்து 3 பெண் குழந்தைகளை பெற்றதால் ஆத்திரம் அடைந்த மாமியார் மருமகளை தலை முடியை பிடித்து தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மருமகளை தாக்கிய மாமியார்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் மாவட்டம், டோரி நகர், காந்திபார்க் தெருவில் வசித்து வரும் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
அடுத்தடுத்த 3 பிரசவத்தில் மருமகள் பெண் குழந்தைகளை ஈன்றெடுத்ததால், ஆத்திரமடைந்த மாமியார், எதற்காக உனக்கு பெண் குழந்தையாக பிறக்கிறது என வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிய, இருவரும் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
अलीगढ़ सास ने की बहू के साथ जमकर मारपीट, सास की हैवानियत का वीडियो आया सामने,बहू के तीन बेटियां पैदा होने पर सास बहू के साथ करती है मारपीट,बेटा पैदा नहीं होने से नाराज है सास,गांधीपार्क इलाके के डोरीनगर का बताया जा रहा है वीडियो,@aligarhpolice @adgzoneagra @Uppolice @dgpup pic.twitter.com/ay04DFWQuk
— Sunder Singh (@sundertv9) July 25, 2023