விடாமல் அழுத குழந்தை; நிறுத்த பால் பாட்டிலில் தாய் செய்த செயல் - பகீர் சம்பவம்!
குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழுத குழந்தை
அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ நகரைச் சேர்ந்தவர் ஹானஸ்டி டீ லா டோரி(37). இவர் அவரது குழந்தையுடன் காரில் சென்றுள்ளார். அப்போது குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்ததுள்ளது.
கையில் பால், பால் பவுடர் எதுவும் இல்லாததால் அங்கிருந்த மதுவை பால் பாட்டிலில் மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார். குழந்தையும் பசி தாங்க முடியாமல் மது நிறைந்த பாட்டிலை குடித்து அழுகையை நிறுத்தியுள்ளது.
தாய் பகீர் செயல்
இந்நிலையில், வாகன சோதனையின்போது தாயின் செயல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீஸார் குழந்தையை ஆய்வு செய்துள்ளனர். அதில் குழந்தையும் போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, விசாரணையில் தாய் செய்த செயலை ஒப்புக்கொண்டுள்ளார். அதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது குழந்தை மருத்துவமனையில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.