இறந்து கிடந்த மனைவி; மறைத்து மகளின் கல்யாணத்தை நடத்திய தந்தை!
மனைவி இறந்த நிலையிலும் தந்தை மகள் திருமணத்தை நடத்தியுள்ளார்.
இறந்த மனைவி
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த ஏம்பலம் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தண்டபாணி. இவரது மனைவி அரசம்மாள்(50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதில் இளைய மகளுக்கு நல்லாத்தூரில் திருமண ஏற்பாடு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, மணமகளுக்கு சடங்கு செய்வதற்காக வீட்டின் அருகே உள்ள உறவினர்களை அழைக்க அரசம்மாள் நடந்து சென்றார்.
மகள் திருமணம்
அப்போது மயங்கி விழுந்த அவர் உயிரிழந்தார். உடனே அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காக மனைவி உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையிலேயே வைத்திருக்க தண்டபானி கேட்டுக்கொண்டார்.
மேலும், மனைவி இறந்ததை உறவினர்களுக்கு கூட தெரியபடுத்தாமல், மகளின் திருமணத்தை நடத்தி முடித்தார். அதனையடுத்து, அரசம்மாள் உடல் பிரேத பரிசோதனை செய்து ஒப்டைக்கப்பட உள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.