3வது கணவருடன் இணைந்து பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொன்ற தாய் - அதிர்ச்சி சம்பவம்

dhanush rajinikanth aishwaryadhanush
By Petchi Avudaiappan Jan 31, 2022 08:27 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

சென்னை திருவொற்றியூரில் 10 வயது பள்ளி மாணவியை எரித்துக்கொன்ற தாய், 3-வது கணவருடன் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் மேட்டு தெருவைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் இந்தியன் ஆயில் கம்பெனியில் தற்காலிகமாக டேங்கர் லாரி ஓட்டி வருகிறார். இவருக்கும், ஜெயலட்சுமி  என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

அதேசமயம் ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே பால்வண்ணன் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு பிறந்த மகள் தூத்துக்குடியில் நர்சிங் படித்து வருகிறாள். பின்னர் பால்வண்ணன் பிரிந்து சென்றதால் அவருடைய 3வது தம்பி துரைராஜ் என்பவரை ஜெயலட்சுமி 2வதாக திருமணம் செய்தார்.

அவர்களுக்கு பவித்ரா  என்ற‌ மகள் இருக்கிறாள். அவரும் பிரிந்து சென்றதால் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்த பத்மநாபனை ஜெயலட்சுமி 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் மனைவி ஜெயலட்சுமியின் நடத்தையில் பத்மநாபன் சந்தேகப்பட்டு வந்தார். இது தொடர்பாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தனது மகள் பவித்ராவை காப்பாற்றவே நான் 3வதாக உங்களை திருமணம் செய்து கொண்டேன் என ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஜெயலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் பத்மநாபன் தகராறில் ஈடுபட்டார்.அப்போது பத்மநாபன், “உனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை என்றால் உன் மகள் பவித்ரா மீது சத்யம் செய்” என்று கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மகள் பவித்ரா இருப்பதால் தானே இந்த பிரச்சனை என்று கூறி பவித்ரா உடலில் மண்எண்ணெயை ஊற்றி உயிருடன் தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் பவித்ரா அலறி துடித்தாள். உடனே கணவன்-மனைவி இருவரும் பவித்ரா உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி தலைமையிலான போலீசார் பவித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.