60 வயதிலும் வசீகரம்; 90 வயதில் பிள்ளைப்பேறு - அப்படி என்ன செய்கிறார்கள் இந்த பழங்குடியினர்?
ஹன்சா சமூக பெண்கள் உடல், மன ரீதியாக வலிமையுடையவர்கள்.
ஹன்சா
பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஹன்சா பள்ளத்தாக்கு. ஹன்சா இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக செல்கிறது. இந்த கிராமம் இளைஞர்களின் சோலை எனக் கூறப்படுகிறது.
இங்கு ஹன்சா சமூகத்தினர் வாழ்கின்றனர். இவர்கள் மற்ற மக்களை விட மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்கள். 150 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள். பெண்கள் 90 வயதிலும் தாயாக முடியும், 80 வயது வரை இளமையாக காட்சியளிக்கிறார்கள்.
என்ன காரணம்?
இந்த சமூக பெண்கள் உலகின் மிக அழகான பெண்களில் இடம்பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் இமயமலைப் பனிப்பாறையிலிருந்து உருகிய தண்ணீரைக் குடித்து, அதில் குளிப்பதுதான். இந்த நீரில் மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்.
மேலும், தேன் அதிகம் சாப்பிடுகிண்றனர். இவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுகின்றனர். சைக்கிள் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை, பெரும்பாலும் கால்நடையாகவே நடந்து செல்கின்றனர். மிகக் குறைந்த அளவில்,சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே இறைச்சியை உட்கொள்கிறார்கள்.