காலையில் திருமணம்..மாலையில் இறுதி சடங்கு - புதுமண தம்பதி தகராறில் நேர்ந்த கொடூரம்!

Karnataka India Marriage Death
By Swetha Aug 08, 2024 05:15 AM GMT
Report

தம்பதி தகராறில் ஒருவருக்கொருவர் கத்தியால் குத்தி கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

திருமணம்..

கர்நாடகாவின் கோலார் மாவட்டம், செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20).

காலையில் திருமணம்..மாலையில் இறுதி சடங்கு - புதுமண தம்பதி தகராறில் நேர்ந்த கொடூரம்! | Morning Newly Married Couple Fought And Bride Dead

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது. இதனிடையே மதிய வேளையில் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர்.

அப்போது தம்பதிக்குள் பயங்கர தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. 2 பேரும் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.

சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை - அம்பலமான அதிர்ச்சி காரணம்!

சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை - அம்பலமான அதிர்ச்சி காரணம்!

தம்பதி தகராறு

இதை தொடர்ந்து, குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். ஏனினும் குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

காலையில் திருமணம்..மாலையில் இறுதி சடங்கு - புதுமண தம்பதி தகராறில் நேர்ந்த கொடூரம்! | Morning Newly Married Couple Fought And Bride Dead

இது தொடர்பாக நடந்த விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அதில், அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். அதன்பிறகு இருவரும் காயமடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.