மின்னல் தாக்கி ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

india 60death
By Irumporai Jul 12, 2021 10:53 AM GMT
Report

உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 7 குழந்தைகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள ஆம்பர் கோட்டை அருகே மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது மின்னல் தாக்கியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இதேபோன்று கோடா, ஜலாவர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கி 7 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தானில் 20 பேர் வரை உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல் தாக்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்