மதுரை மாநாடு..சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யும் அதிமுக - குஷியில் தொண்டர்கள்..!
வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டிற்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய அதிமுக மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
மாநில மாநாடு
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு, முதல் மாநில மாநாடாக வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களுக்காக சிறப்பான ஏற்பாடுகளையும் அதிமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கூடுதல் பெட்டிகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதற்காக பலரும் வருவார்கள் என்பதால், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பேட்டிகளை இணைத்திட மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் அதிமுகவின் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.