விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காணவரும் பிரதமர் : அவசரமாக பெயிண்ட் அடிக்கப்படும் மருத்துவமனை , விளாசும் நெட்டிசன்கள்
குஜாராத்தின் மோர்பி நகரில் பழமையான தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது இந்த விபத்தில் 100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தொங்கு பாலம் விபத்து
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோர் மோர்பி சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி இன்று நேரில் சந்திக்கவுள்ளார்.

ஆகவே மோர்பி சிவில் மருத்துவமனையில் இரவோடு இரவாக பெயிண்டிங் மற்றும் தூய்மை பண்களை மேற்கொண்டனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
Note, 141 people died in #MorbiBridgeCollapse. PM Modi will be visiting Morbi tomorrow. The hospital in Morbi is being renovated overnight for his welcome.
— Mayank Saxena (@mayank_sxn) October 31, 2022
There cannot be a more crass example of insensitivity.#ShameModi pic.twitter.com/c49nzNcZ3y
மருத்துவமனை அவசரமாக புதுப்பிப்பு
கடந்த சில வருடங்களாகவே பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் வரும் நிலையில் தற்போது தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவது பிரதமர் மோடியின் மீதும் பாஜக அரசின் மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.