தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மீது பயங்கர தாக்குதல் - கோமா நிலைக்கு சென்றதால் ரசிகர்கள் பிரார்த்தனை!

South Africa National Cricket Team
By Swetha Subash Jun 01, 2022 10:10 AM GMT
Report

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் இளம் வீரரான மாண்ட்லி குமாலோ.

20 வயதுடைய இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடினார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் பங்குபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதற்காக இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் பார்ட்டியில் ஈடுபட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மீது பயங்கர தாக்குதல் - கோமா நிலைக்கு சென்றதால் ரசிகர்கள் பிரார்த்தனை! | Mondli Khumalo Attacked By Man Slips Into Coma

அப்போது இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கு இடையே எழுந்த பிரச்சனையில் அடையாளம் தெரியாத நபர் இளம் வீரரான மாண்ட்லியை தாக்கியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மீது பயங்கர தாக்குதல் - கோமா நிலைக்கு சென்றதால் ரசிகர்கள் பிரார்த்தனை! | Mondli Khumalo Attacked By Man Slips Into Coma

அந்த நபர் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த மாண்ட்லி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கோமாவுக்கு சென்றதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, மாண்ட்லி குமாலோ விரைவில் குணமடைய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.