திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

Tamil nadu Power Cut Tamil nadu Chennai
By Vinoja Jul 18, 2026 03:12 PM GMT
Report

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் திங்கட்கிழமை (20.07.2026) பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன், மதியம் 2.00 மணிக்குள் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் | Monday 20 07 2026 Power Cut In Chennai

பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்

ஆவடி: வைஷ்ணவி நகர் (1 முதல் 10வது தெருக்கள்), சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகள்.

தாம்பரம்: கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் (வடக்கு மற்றும் தெற்கு), பாலகிருஷ்ணன் நகர், முடிச்சூர் சாலை, பழைய பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகள்.

பெரும்பாக்கம்: பெருமாள் கோவில் தெரு மற்றும் சுற்றுப்பகுதிகள், அப்பர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சாய் ஆயுஷா மற்றும் ராக அமிர்தா அடுக்குமாடி குடியிருப்புகள், சூரியா நகர், ஜெயா நகர், சத்ய சாய் நகர் உள்ளிட்ட பகுதிகள்.

பல்லாவரம் மற்றும் அனகாபுத்தூர்: சாரா நகர், யூனியன் கார்பைடு காலனி, பார்த்தசாரதி தெரு, சாஸ்தா நகர், திருவேங்கடமுடையான் தெரு, ரங்கசாமி தெரு, அண்ணா சாலை, திருநீர்மலை பிரதான சாலை, அப்துல்கலாம் சாலை, ஸ்ரீபுரம், சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகள்.

மாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகள்: மாத்தூர் எம்எம்டிஏ, பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், அசிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை, கொசப்பூர், தீயப்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம், வடபெரும்பாக்கம் தொழில் பூங்கா, பார்வதிபுரம், ஸ்ரீனிவாசா மாடர்ன் டவுன், கன்னி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மின்தடை நேரத்தில் பொதுமக்கள் தேவையான மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும், அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.