சீராஜை சீண்டி.. சிக்கலில் சிக்கிய ஆண்டர்சன்!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த 4ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அசத்தினார்.
ஆல்-ரவுண்டர் ஜடேஜா 56 ரன்கள் எடுக்க இந்திய அணி 232 ரன்கள் எடுத்த நிலையில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் சேர்த்து 278 ரன்கள் எடுக்க உதவியாக இருந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணி 90 ரன்கள் முன்னிலையில் இருந்த போது முகமது சிராஜை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சில வார்த்தைகளை பேசியாவாறு சிராஜின் நெஞ்சிலும் உரசிவிட்டு சென்றார் இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக வலம் வருபவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இப்படி இளம் வீரரை சீண்டுவது தவறு என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.