என்ன பண்றது அவரால வரமுடியாது மிக முக்கிய வீரை 'மிஸ்' பண்ணும் சிஎஸ்கே - எல்லாத்துக்கு காரணம் அதுதானா ?

csk ipl moeenali
By Irumporai Mar 23, 2022 09:55 AM GMT
Report

ஐபிஎல் திருவிழா மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது, இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர்  15-வது வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்த முறை ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சூரத் சென்ற சிஎஸ்கே வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தீபக் சஹார் காயம் காரணமாக விளையாட வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. அதனால் அவரும் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே எனக்காக 15 போட்டிகளில் விளையாடிய மொயின் அலி 357 ரன்களை குவித்தார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆகவே இந்த முறை சிஎஸ்கே  அணி மோதக்கூடிய முதல் போட்டியில் மொயின் அலி விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.