மோடி மீண்டும் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டிடிவி தினகரன்!
மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
காலை முதலே பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். அந்தவகையில் சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடி விதினகரன் தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை செலுத்தினார்.
டிடிவி தினகரன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பின், தேனி மக்களவை தொகுதி அ.ம.மு.க கோட்டையாக மாறிவிட்டது. 100 சதவிகிதம் தமிழக மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.
மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது. சென்னை போன்ற மாநகரங்களில் மக்கள் மோடிக்கு ஆதரவாக உள்ளார்கள். அதை வாக்குப்பதிவு மூலமே நிரூபிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.