தாயின் உடலை சுமந்து சென்ற பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.
கடவுளின் காலடியில்
தனது தயார் இறந்தது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்துள்ளது .

என் அம்மாவிடம் , ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் சின்னம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உணர்ந்தேன்.
शानदार शताब्दी का ईश्वर चरणों में विराम... मां में मैंने हमेशा उस त्रिमूर्ति की अनुभूति की है, जिसमें एक तपस्वी की यात्रा, निष्काम कर्मयोगी का प्रतीक और मूल्यों के प्रति प्रतिबद्ध जीवन समाहित रहा है। pic.twitter.com/yE5xwRogJi
— Narendra Modi (@narendramodi) December 30, 2022
தூய்மையுடன் வாழுங்கள்
அவரது 100 வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார், இது எப்போதும் நினைவில் உள்ளது, இது புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள், என்று பிரதமர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் குஜராத்தின் காந்தி நகரில் உள்ள வீட்டில், தாயார் ஹீராபென் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரின் உடலை சுமந்து சென்றார் பிரதமர் மோடி.