10வது முறை; செங்கோட்டில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி - இந்த தாக்கம் அடித்த 1000 ஆண்டுகள் இருக்கும்!
செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.
சுதந்திர தினம்
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று(ஆகஸ்ட் 15) காலை செங்கோட்டையில் பிரதமர் மோடி நம் தேசிய கொடியான மூவர்ண கொடியை 10வது முறையாக ஏற்றினார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
முன்னதாக, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது. அதன்பின், ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மோடி மரியாதை
தொடர்ந்து, உரையாற்றிய பிரதமர், மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும். அமைதியை கொண்டு வர மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் புகுந்து செல்வ வளங்களை கொள்ளையடித்தனர்.
தேசத்தை வலிமையுடன் கட்டமைக்கும் பணிகளில் நமது கவனம் உள்ளது. உலகிற்கே மிகப்பெரிய நம்பிக்கையை இந்தியா விதைத்துள்ளது. தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளின் தாக்கம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இருக்கும்.
30 வயதிற்கு குறைவான இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது.
சீர்திருத்தம், செயல்பாடு மாற்றம் இதுவே நம் தாரக மந்திரம். இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசு தேவை. இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில், அந்த தடையை நீக்கியுளோம் எனப் பேசியுள்ளார்.