இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்.. திருக்குறள் மூலம் மோடியினை கிண்டல் செய்த ப. சிதம்பரம்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 7 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இந்த நிலையில் திருக்குறளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்ட்சித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது 7-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த நிலையில் பாஜக அரசினை கிண்டல் செய்யும் விதமாக ப. சிதம்பரம் தனது ட்வீட்டரில் பதிவு ஒன்றை வைத்துள்ளார்.
அவரது பதிவில்: பணவீக்க வீழ்ச்சி, தொழில்துறை வீழ்ச்சி, பணமதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தை வீழ்ச்சி என 7 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது மோடி அரசு வரி விதிப்பு சீரழிவு, வேலைவாய்ப்பின்மை என பொதுமக்களை வறுமையின் பிடியில் சிக்க வைத்துள்ளது.
மோடியின் 7 ஆண்டுகால அரசு. அதே போல 2016 பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மேலே சொன்னவைதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகள்.
பணமதிப்பிழப்புக்குப் பிறகு மத்திய ( பாஜக )அரசின் ஒவ்வொரு முடிவுகளும் தவறான திசையில்தான் இருக்கிறது அவற்றை ஏற்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது .
யார் பேச்சையும் கேட்காமல் மோடி பிடிவாதம் பிடித்துவருவதால் 488-வது திருக்குறளை மோடிக்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது என குறிபிட்டு அந்த குரலையும் குறிப்பிட்டுள்ளார்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
விளக்கம்: (அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்- )
இதன் மூலம் பிரதமர் மோடி யார் ஆலோசனையினையும் கேட்பதில்லை என்பதை தனது ட்வீட்டர் பதிவின் மூலம் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Mr Modi’s fault is that he will not tolerate criticism or heed well-meaning advice of distinguished economists
— P. Chidambaram (@PChidambaram_IN) April 13, 2021
Remember Kural 448:
“The king, without the guard of men who will rebuke him, will perish though there is none to destroy him”
அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு IBC Tamil