3-வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிப்பேன் - பிரதமர் மோடி

BJP Prime minister Narendra Modi
By Karthick Aug 10, 2023 01:48 PM GMT
Report

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த நிலையில், அதில் பிரதமர் பேசிய ஒரு தொகுப்பை காணலாம்.

பிரதமர் மோடி பதிலுரை

மக்கள் எங்கள் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர்களுக்கு தனது நன்றியையும் பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசீர்வாதமாக கருதுகிறேன். எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை 2019-லேயே கொண்டு வந்து விட்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்து பாஜக வெற்றி பெரும்.

மிகவும் மோசமாக விமர்சித்தார்கள் 

modi-speech-in-no-confidence-motion

நாட்டின் கோடி கணக்கான மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்ள இங்கு வந்துள்ளேன். மக்களவையில் 3 நாட்களாக நடைபெறும் வரும் விவாதங்களை கவனித்து வருகிறேன். மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் எதிர்கட்சிக்களுக்கு அக்கறை இல்லை. ஏழைகளின் பசி மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை.

எல்லா தருணத்திலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு துரோகத்தை தான் செய்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மசோதாக்களை எதிர்க்கட்சிகள் நிராகரிப்பது ஏன் என பிரதமர் கேள்வி. ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்கட்சிகளின் நோ பால் என கிண்டல். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.  

எல்லாமே நோ பால் தான் 

ஒரு முறை நோ பால் போட்டால் பரவாயில்லை, திரும்ப திரும்ப போட்டால் எப்படி என கிண்டலடித்தார். 5 வருடம் வாய்ப்பு அளித்தும் ஆட்சியில் அமர எதிர்க்கட்சிகள் தயாராகவில்லை. ஒரே ஒரு நாள் மட்டுமே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அலுவல்களை அனுமதித்தனர். எங்கள் அரசு சதம் அடிக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் நோ பால் வீசுகிறார்கள். நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் முதல் நாளில் ராகுல் காந்தி பேசாதது ஏன் என கேள்வி.

நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை தவிர எதிர்க்கட்சிகள் வேறு ஏதும் தரவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்கட்சிகளால் ஒதுக்கப்பட்டுள்ளார். மக்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் இருந்த போதும் அவருக்கு பேசக்கூட வாய்ப்பு வழங்கவில்லை.

1000 ஆண்டுகள் பேசும் 

நாங்கள் இப்போது செய்யும் பணிகள், 1000 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். கட்சியை விட தேசம் தான் என பணியாற்றி வருகிறோம். அனைவரும் ஒன்றிணைத்து வலிமையான இந்தியாவை கட்டமைக்க வேண்டும். அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை பாஜக மீட்டுள்ளது. பாஜகவின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையுள்ளது. அவர்களுக்காக பல திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

ஊழல் இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். எங்களது சாதனை தான் எதிர்க்கட்சிகளுக்கு வேதனையை கொடுத்துள்ளது. இந்தியாவில் வறுமை வேகமாக குறைந்து வருகின்றது. 35 கோடி இந்திய மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளார்கள். 

வசையை வாழ்த்தாக ஏற்கிறேன்

modi-speech-in-no-confidence-motion

நாட்டின் வளர்ச்சி மீதே முழுமையான கவனத்தை பாஜக கொண்டுள்ளது. தற்போதைய தேவையும் அதுவே. உலகநாடுகளுக்கு தெரியும் இந்தியாவின் வளர்ச்சி, எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. தூய்மை இந்திய திட்டத்தை WHO'வே பாராட்டியுள்ளது. சுத்தமான குடிநீர் அளித்ததன் மூலம் 4 கோடி மக்களை காப்பாற்றிருக்கிறோம். 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது, இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

எதிர்க்கட்சிகள் கடந்த 3 நாட்களாக என்னை கடுமையாக விமர்சித்தனர். என்னை அவதூறாக பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போன்றது. எதிர்க்கட்சிகள் யாரை கடுமையாக விமர்சிக்கிறார்களோ அவர்கள் மிக பெரிய அளவில் வளர்ந்து விடுகிறார்கள்.  எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை நான் வாழ்த்துக்களாக எடுத்துக்கொள்கிறேன். பொதுத்துறை வங்கிகளின் லாபம் இரண்டு மடங்காக வளர்ந்துள்ளது. விமர்சனம் செய்வதில் மிகவு கீழான நிலையை எதிர்க்கட்சிகள் அடைந்துள்ளன.


எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்க தெரியவில்லை 

modi-speech-in-no-confidence-motion

கடந்த 20 ஆண்டுகளாக என்னை விமர்சிப்பதே எதிர்க்கட்சிகளுக்கு வேலை. கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். HAL நிறுவனத்தின் எதிர்க்கட்சிகள் மங்கிவிட்டன என எதிர்க்கட்சிகள் சந்தேகித்தன.'

ஆனால் பாஜக ஆட்சிக்கு பிறகு அது தவிடுபொடியாக்கி, HAL லாபம் ஈட்டியது. அதே போல LIC குறித்தும் எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்தனர், ஆனால் தற்போது LIC'யும் நன்றாக செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான தேர்தல் வியூகம் இல்லை. பாஜகவிடம் என்ன கேள்வி கேட்கவேண்டும், எவ்வாறு கேட்கவேண்டும் என்பது கூட எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை.

மீண்டும் ஆட்சியை பிடிப்பேன்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதாரம் 3-வது இடத்திற்கு முன்னேறி இருக்கும். காங்கிரஸ் கட்சியில் தொலைதூர பார்வை கொண்ட தலைவர்கள் இல்லை. இந்தியா குறித்தும் காங்கிரஸிடம் தெளிவான திட்டங்கள் இல்லை. 3-வது முறையாக ஆட்சியை பிடிப்பேன். காங்கிரஸ் ஆட்சியில் வறுமை உச்சத்தில் இருந்தது. 2028-லும் தீர்மானம் கொண்டுவருவீர்கள்.

அப்போது இந்திய பொருளாதாரத்தில் 3-வது இடத்தில் இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு கடின உழைப்பு மீது நம்பிக்கை கிடையாது. பங்குசந்தையில் ஆர்வமுள்ளவர்கள் அரசின் பங்குகள் மீது முதலீடு செய்தால் அது இரட்டிப்பாகும். 

மக்களுக்கு காங். மீது நம்பிக்கையில்லை.

தேசத்தின் பலம் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை. டிஜிட்டல் இந்தியாவை கொண்டுவந்த போது, எதிர்த்தீர்கள், ஆனால் அது பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசி மீது கூட காங்கிரஸ்க்கு நம்பிக்கையில்லை. தமிழ்நாடு, ஒடிசா, மேற்குவங்கம் , திரிபுரா, நாகலாந்து, ஆந்திர மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை.

modi-speech-in-no-confidence-motion

கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த் காங்கிரஸ் உறக்கத்தில் இருந்தது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலையும் காங்கிரஸ் அரசியலாக்கியது. நாட்டில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதே எங்களின் தாரக மந்திரம். UPA கூட்டணி இறந்து புதைக்கப்பட்டுவிட்டது. அதன் இறுதி அஞ்சலி பெங்களூருவில் நடைபெற்றது. UPA என்பதற்கு பதிலாக INDIA என பெயர் வைக்கப்பட்டதற்கு மோடி கடும் கண்டனம்.