பாரத மாதா குறித்து பேசியதை ஒரு போதும் மன்னிக்க முடியாது; மணிப்பூரில் நிச்சயம் அமைதி திரும்பும் - மக்களவையில் மோடி பேச்சு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசி வருகிறார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காட்டி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசுகையில், மத்திய அரசு மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் என்று கடுமையாக ஆவேசத்துடன் குற்றம் சாட்டினார். பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவைக்கு வருகை தந்து பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து பேசி வருகிறார்.
பிரதமர் மோடி பேச்சு
கடந்த 2018 ஆம் ஆண்டும் எதிர்க்கட்சிகள் எனது தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள் நான் ஐந்து வருடங்களுக்கு முன்பே இவர்கள் மீண்டும் இதை செய்வார்கள் என சரியாக கணித்திருந்தேன், எனது கணிப்பு இன்று உண்மையாகிவிட்டது.
2018 ஆம் ஆண்டும் எங்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லை ஆனால் மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருந்தது அதனால்தான் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். வரும் 2024 ஆம் ஆண்டு அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்து மீண்டும் ஆட்சிக்கு வரும். கட்சியை விட தேச முக்கியம் என்று மனதில் கொள்ள வேண்டும் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
நாங்கள் இப்போது செய்யும் காரியங்கள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடவடிக்கை எடுத்தபோது கூட காங்கிரஸ் அதில் மோசமான அரசியலை செய்தார்கள் என்று மோடி மக்களவையில் பேசினார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தவுடன் பிரதமர் மோடி மணி மணிப்பூர் குறித்து பேசத் தொடங்கினார். எதிர்க்கட்சிகள் வெளியேறும் வரை பிரதமர் மோடி காத்திருந்து பின்னர் மணிப்பூர் குறித்து பேச ஆரம்பித்தார்.
பாரத மாதா குறித்து பேசியதை ஒரு போதும் மன்னிக்க முடியாது. மணிப்பூரில் நிச்சயம் அமைதி திரும்பும். மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்து வருகிறது. மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.