நான் 3 வது முறையாக பிரதமராகும்போது, இதை நடத்திக்காட்டுவேன் - மோடி வாக்குறுதி!
மோடி தான் 3 வது முறையாக மீண்டும் பிரதமாரானால் கண்டிப்பாக நடத்திக்காட்டுவேன் என்று கூறியுள்ளார்.
திறப்பு விழா
டெல்லி, பிரஹதி மைதான் பகுதியில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம், ஜி20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதனை ஒட்டி, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் கட்டடம், சுமார் இரண்டாயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டது. இதில் 3வது தளத்தில் 7 ஆயிரம் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பாரத் மண்டபம் என பெயர் வைக்கப்பட்ட இந்த புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மோடியின் உரை
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தாம் முதன்முறை ஆட்சி அமைக்கும்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்து.
தனது இரண்டாவது பதவிக் காலத்தில், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியிருப்பதாக பெருமிதமாக தெரிவித்தார். தாம் மீண்டும் ஆட்சியமைக்கும்போது, இந்தியாவை 3வது இடத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறியுள்ளார்.