ஊரக உள்ளாட்சி தேர்தல் - வெற்றிப்பெற்ற பா.ஜ.வினருக்கு தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர்
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து கூறியிருக்கிறார்.
தமிழக பா.ஜ., சார்பில், 9 மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 381 பேர் வெற்றி பெற்றிருப்பதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் (அக்.,18) அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதோ அந்த பதிவு -
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
— Narendra Modi (@narendramodi) October 20, 2021
அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம். https://t.co/xJNjD0A12O