நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி கவலை வேண்டாம்...கடைசி பந்தில் சிக்ஸர் அடிபோம் - மோடி!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், அது குறித்து கவலை பட வேண்டாம் என பிரதமர் மோடி பாஜக எம்.பிக்களிடம் தெரிவித்திருக்கிறார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
மணிப்பூர் தொடர்ந்து நடந்து வரும் வன்முறைகளை கண்டித்து அம்மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் ஆளும் பாஜக அரசையே கண்டித்து நேற்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும், மக்களும், தாங்களும் மத்திய அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாக நேற்று ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், வரும் 10-ஆம் தேதி பிரதமர் மோடி இது குறித்து பதிலளிக்கவுள்ளார்.
கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்போம்
நேற்று நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பாஜக எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது எம்.பி'க்களிடம் பேசிய அவர், இண்டியா கூட்டணியில் அவநம்பிக்கை நிலவுகிறது.
தங்களோடு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இதை நமக்கான வாய்ப்பாக கருத வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கவலைப்பட தேவையில்லை. நாம் (பாஜக எம்பிக்கள்) கடைசி பந்தில் சிக்சர் அடிப்போம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.