மக்களை ஏமாற்றியதா மக்கள் நீதி மையம்?
மக்களை ஏமாற்றியதா மக்கள் நீதி மையம்? சினிமாவை போல அரசியல் என்று வந்தால் இப்படிதான் என்று சிறந்த உதாரணம் கொடுக்க முடியும் என்றால், அது மக்கள் நீதி மையம் கட்சி என்றே கூறலாம் மிக விரைவாக கட்சியை துவக்கிய கமல்ஹாசன் முதலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தங்கள் கட்சியை அறிமுகப்படுத்திக்கொண்டார்,
கட்சியில் ஊழல் இருக்காது,லஞ்சம் இருக்காது என பிரச்சார விளம்பரம் எல்லாம் செய்தார். மக்கள் நீதி மையத்தில் மிகவும் அறிவுசார்ந்தவர்கள் மிக முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என பெருமைப்பட தெரிவித்தார்கள் ஒரு வழியாக கட்சிக்குள் இருக்கும் அனைத்து முக்கிய பொறுப்புகளுக்கும் ஆட்களை நியமித்து தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது சட்டமன்ற தேர்தலில் 142 இடங்களில் போட்டியிட்டது மக்கள் நீதி மய்யம்.ஒரு இடத்திலும் வெற்றிபெறாத நிலையில் யார் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான் என்று அனைவரும் அறிந்த உன்மை,
[
ஆனால் தற்போது மக்கள் நீதி மையத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் கூண்டோடு வெளியேறி நடிகர் கமல்ஹாசன் மீது குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். கமல்ஹாசன் நிர்வாகிகள் மீது குறைகூறுகிறார் எதை நம்புவது,
தேர்தலுக்கு முன்பு கமல்ஹாசன் மீது பல விமர்சனங்கள் வந்தது அதெல்லாம் தற்போது உண்மை ஆக்கிவிட்டாரா கமல்? ஒரு வழியாக இவரை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார் கமல்ஹாசன் என்று ரசிகர் மற்றும் கமல்ஹாசனுக்கு வாக்களித்த வாக்காளர்கள் புலம்புகின்றனர்,
எனவே கமல்ஹாசன் மீது மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் என்ன பதில் கூற போகிறார் என்று பொறுத்திருந்து பார்போம்.