“பொறுத்திருந்து பாருங்கள்” ஷாக் கொடுக்க காத்திருக்கும் முதலமைச்சர்!
நீதிக்கட்சி வழியில் தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சி நான். கடந்த 2 நாட்களில் அனைத்து கட்சிகளை சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐந்தாண்டு காலத்தில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லமுடியாது. ஆளுநர் உரையில் அரசின் ஓராண்டு காலத் திட்டங்கள் மட்டுமே இடம்பெறும். ஆளுநர் உரை ஒரு ட்ரெய்லர்தான் மீதியை பொறுத்திருந்து பாருங்கள். திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.என்று கூறினார்.

விரைவில் ஷாக் கொடுக்கும் திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.