தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. தமிழகத்திலும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான பற்றாக்குறை காரணமாக, சென்னை மற்றும் இன்னும் பல இடங்களில் சில தினங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ரத்து செய்யப்படுகின்றன.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டும் வேளையில், தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இருப்பது தடுப்பூசி செயல்முறையில் பெரும் தடையாக உள்ளது.
இந்த நிலையில், சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாகவும் அது நீக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.