திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன்!
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து,மாற்றுக்கட்சியில் சேர இருப்பதாக ஐபிசி தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, மீண்டும் ரசிகர் மன்றமாக செயல்படும் என அறிவித்தார். இதற்கு முன்னதாகவே, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன் தனது பொறுப்பில் இருந்து விடுவித்து கொண்டார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்பு வகித்த, மாவட்ட, ஒன்றியம், நகரம், மாநகர நிர்வாகிகள், முன்னாள் ரஜினி மக்கள் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கேவிஎஸ் சீனிவாசனை சந்தித்து, மாற்றுக் கட்சியில் சேருவது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

அதற்காக மக்கள் மன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு, எங்களை 30 ஆண்டுகளாக ரசிகர் மன்றம், மக்கள் மன்ற பணிகளில் வழி நடத்திச் சென்ற கேவிஎஸ் சீனிவாசனை, பின் தொடர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக
தெரிவித்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கே.வி.எஸ்.சீனிவாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.