தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க பிரதமருக்கு உரிமை கிடையாது - முக ஸ்டாலின் அதிரடி

Amit Shah M K Stalin DMK
By Karthick Aug 12, 2023 05:38 AM GMT
Report

பாஜகவினருக்கும், பிரதமர் மோடிக்கும் தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க உரிமையில்லை என முக ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

புதிய மசோதாக்கள்

நேற்று நாடாளுமன்றத்தில் இந்திய குற்றவியல் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு மாறாக பாரதிய சாக்ஷ்யா, இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு மாறாக பாரதிய நகரிக் சுரக்ஷா என பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு மசோதாக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

mkstalin-angry-comments-on-amit-shah

இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதை தமிழ பிரதமர் முக ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், #Recolonisation in the name of #Decolonisation!என்று பதிவிட்டுள்ளார்.

முக ஸ்டாலின் கண்டனம் 

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய மசோதா ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை மத்திய அரசு சிதைத்துள்ளது என குறிப்பிட்டு, மத்திய பாஜக அரசு மேற்கொண்ட துணிச்சலான முயற்சி மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும் என சாடியுள்ளார்.

mkstalin-angry-comments-on-amit-shah

இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை என் அதிரடியாக பதிவிட்டுள்ள முக ஸ்டாலின், தமிழ்நாட்டின் வரலாற்றின் பின்னணியில் தமிழ்நாடும், திமுகவும் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொண்டு மீண்டுள்ளது என்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் தமிழ் மொழி அடையாளத்தை பாதுகாத்துள்ளோம் என பதிவிட்டுள்ளார்.  

mkstalin-angry-comments-on-amit-shah

இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது என பதிவிட்டு, இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் துணிச்சலான முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.