மக்களுக்கு சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu DMK
By Jiyath Nov 04, 2023 02:00 PM GMT
Report

மக்களுக்கு சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கன மழை

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. அதில் சென்னையில் கடந்த மூன்று நாட்களில் 11 செ.மீ மழை பேதுள்ளது. இதனால் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்! | Mk Stalin X Post About Dravidian Model Governement

எனவே மழைநீரை தேங்காமல் தடுக்கவும், தேங்கும் மழைநீரை ஒருமணி நேரத்தில் அகற்றுவதற்கும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்.

திராவிட மாடல் அரசு

தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்! | Mk Stalin X Post About Dravidian Model Governement

அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும். மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்" என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.