2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

tamilnadu mk stalin 6 anti corruption
By Swetha Subash Jan 22, 2022 10:12 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

ரூ.2 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

2021- 22 -ம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மை துறையின் மானியக் கோரிக்கையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு,

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி மனிதவள மேலாண்மை துறை சார்பில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில்

2 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.