தமிழகத்தை நிரந்திரமாக திமுக தான் ஆளவேண்டும்...முதல்வர் முக ஸ்டாலின்
ராமநாதபுரம் பேராவூரில் நடைபெற்ற திமுகவின் தென்மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறையில் முதல்வர் முக ஸ்டாலின், மத்திய பாஜக அரசை கண்டித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
நிரந்திரமாக தமிழகத்தை ஆளவேண்டும்
தமிழகத்தை நிரந்திரமாக ஆளவேண்டும் என்ற கலைஞரின் கனவை நிறைவேற்றுவோம் என்று கேட்டுக்கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் கட்சியில் புதியதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மத்தியில் பல ஆட்சி மாற்றங்களை வித்திட்டது திமுக தான் என குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வாக்குச்சாவடி முகவர்களின் பணிகளை பட்டியலிட்ட முதல்வர் முக ஸ்டாலின், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சி அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்டமைப்பையே பாஜக சீரழித்து விட்டது
இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக அரசு சீரழித்து விட்டதாக குற்றம்சாட்டிய அவர், 2014-இல் கொடுத்த ஒரு வாக்குறுதியையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டினார். 15 லட்சமும் போடவில்லை, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கவும் இல்லை என குற்றம்சாட்டிய முக ஸ்டாலின், பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு பாதுகாப்பு என்ற பிரதமரின் வாக்குறுதி என்னவாயிற்று என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உரிமையை கேட்டால் பிரிவினை வாதமா?
9 ஆண்டுகளாக மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும் என கூறும் இடத்தில் வெறும் செங்கல் மட்டுமே இருக்கிறது என தெரிவித்த அவர், தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் மத்திய அரசு, தமிழகத்திற்கான எந்த திட்டங்களையும் செயல்படுத்த மாறுகிறது என சாடினார்.
தமிழ்நாட்டின் உரிமைகளை குறித்து கேள்வி எழுப்பினால், பிரிவினை வாதம் பேசுவதாக கூறுகிறார்கள் என குற்றம்சுமத்தி, வடமாநில மக்களின் ஆதரவையும் பாஜக இழக்கத்துவங்கியுள்ளது என கூறினார்.