உண்மையான திமுக'காரன் இவன்தான்....கள்ளக்கூட்டணியில் அதிமுக - பாஜக..SpaceX தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் உரை

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK Chief Minister of Tamil Nadu
By Karthick Oct 01, 2023 03:14 AM GMT
Report

திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தின் இறுதி நாளான நேற்று தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முக ஸ்டாலின், spaceX தளத்தில் நேற்று உரையாற்றினார்.

முக ஸ்டாலின் உரை    

திமுகவின் IT Wing முன்னெடுப்பில் நேற்று spaceX தளத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். 'திராவிட மாதம்' என்று சொல்லப்படும் செப்டம்பர் மாதத்தில், தினமும் ஒரு தலைப்பில், இயக்க முன்னோடிகள் கலந்துகொண்டு திராவிட இயக்கக் கருத்துகளைப் பேசி இருக்கிறார்கள் என குறிப்பிட்ட, நிறைவு நாளான இன்றைக்கு, தன்னை பேச அழைத்திருக்கிறீர்கள் - மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

mk-stalin-space-x-speech

கடந்த 1985-ஆம் ஆண்டி முதல் தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல,கழகத்தின் ஒவ்வொரு அணியும் இணைந்து இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என கூறிய முதல்வர் முக ஸ்டாலின், 2000 ஆயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட நாம் மீண்டெழுந்த வரலாறு - தந்தை பெரியார் காட்டிய பகுத்தறிவு - சமத்துவப் பாதை - பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்துள்ள கருத்தியல் தளம் - தமிழினத் தலைவர் வடித்து கொடுத்த ஐம்பெரும் முழக்கங்கள் - 2018-ஆம் ஆண்டு நான் செயல் தலைவரான பிறகு முன்வைத்த ஐம்பெரும் முழக்கங்கள் என்று, 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற எதிர்காலத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான திட்டங்கள் என்று நாம் பேச - எழுத கொள்கைகளும் கருத்துகளும் ஏராளமாக இருக்கிறது என குறிப்பிட்டார்.  

ஒரு காலத்தில், நம்முடைய கொள்கைகளைப் பரப்ப, பேச்சு மேடை - நாடக மேடை - திரையுலகம் – எழுத்துலகம் என்று மக்களை சென்றைடைய செய்வதற்கான அனைத்து மீடியத்தையும் பயன்படுத்திக்கொண்டோம் என சுட்டிக்காட்டி, பாட்டு, கவிதை, கதை, நாவல், திரைப்படம், நாடகம், நாளிதழ் -வார இதழ் - மாத இதழ் என்று எவ்வாறெல்லாம் மக்களிடம் பேச முடியுமோ, அவ்வாறெல்லாம் பேசினோம் என்றும் 'முரசொலி பொங்கல் மலர்' எல்லாம் பாத்தீர்கள் என்றால், பொக்கிஷம் மாதிரி இருக்கும் என்றார்.திமுக'காரன் எவ்வளவு கொள்கை வெறி பிடித்தவன் என்பதை எடுத்துரைக்க அண்ணாவுடன் தொண்டர் ஒருவருக்கு ஏற்பட்ட உரையாடலை கூறிய முதல்வர் முக ஸ்டாலின், சாதாரணமான மக்களை கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி தான் திமுக என்றும் ஆனால் கட்சியில் அனைவர்க்கும் அறிவார்ந்த கொள்கையும் அதனை அடையும் லட்சியமும் உள்ளது என்றார்.

mk-stalin-space-x-speech

பெரிய பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை. நம்முடைய கருத்துகளை - கொள்கைகளை இன்னொருவரிடம் பேசுவதே, மிகப்பெரிய பரப்புரைதான். ஃபேஸ்புக் - யூடியூப் - வாட்ஸ்அப் - ட்விட்டர் - இன்ஸ்டாகிராம் - ஷேர்சாட் – டெலிகிராம் என்று நிறைய வசதிகள் வந்துவிட்டது என தெரிவித்து, இது எல்லாவற்றையும் நம் கொள்கைகளைக் கொண்டு செல்ல – கட்சியை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! நம்முடைய சாதனைகளை சொல்ல வேண்டும்! மக்களை திசைதிருப்ப - ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறி இதையெல்லாம் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் என சுட்டிக்காட்டி, இதைக் கவனத்தில் வைத்து செயல்படுங்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி, அவ்வாறு செயல்படும் ஐ.டி. விங்-ஐ சேர்ந்தவர்களுக்கும் - தங்களின் அடையாளத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் கட்சிக்காக உழைக்கும் பலருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர், ஒரே வட்டத்திற்குள் நாம் சுருங்கிடாமல், வெவ்வேறு தளங்களை நாம் சென்றடைய சமூக வலைத்தளங்கள் பயன்படுகிறது என பேசினார்.

மேலும், அதனால்தான், நான்கூட இப்போது 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' என்ற பாட்காஸ்ட் சீரிஸ்-ஐத் தொடங்கியிருக்கிறேன் கூறி, ஏற்கனவே இரண்டு எபிஸோட் வந்துவிட்டது, விரைவாகவே அடுத்ததும் வரும். இந்தப் பாட்காஸ்ட் சீரிஸ், தமிழ்நாட்டை தாண்டி நம்முடைய கருத்துகளை, தெலுங்கு - மலையாளம் - கன்னடம் – இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் கொண்டு செல்கிறோம் என தெரிவித்த அவர், "என்னடா இது? இவர்கள் தமிழ்நாட்டில் முடங்கிக் கிடப்பார்கள் என்று பார்த்தால், இந்தி பேசும் மாநிலத்திற்கும் வந்துவிட்டார்கள்" என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் என விமர்சித்தார்.

mk-stalin-space-x-speech


பார்லிமெண்ட் எலக்‌ஷனுக்கான என்னுடைய பிரச்சாரத்தை நான் தொடங்கிவிட்டேன் - நாம் சேர்ந்து முன்னெடுப்போம் வெற்றி பெறுவோம் என்றுரைத்த முக ஸ்டாலின், இந்திய அரசியலில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருக்கும் நாம்தான், இந்த மாதிரி பாட்காஸ்ட் பிரச்சாரத்திலும் முன்னோடியாக இருக்கிறோம் என பெருமித தெரிவித்து, இவ்வாறு எல்லாவற்றிலும் நாம் அப்டேட்டாகவும் இருக்க வேண்டும்.அட்வான்ஸாகவும் இருக்க வேண்டும் என்றார்.

அதனால்தான், இப்போது நம்முடைய கருத்துகள் மற்ற மொழி ஊடகங்களிலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது என கூறி, இந்தியாவுக்காகப் பேசுவோம் - எபிஸோட் 1 & 2, இதுவரை பல லட்சம் பேரால் கேட்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பத்து, பதினைந்து மாநாடு நடத்தியதற்குச் சமம். மாநாடு என்றால் நம்முடைய ஆட்கள்தான் பெரும்பாலும் வருவார்கள்.பொய்களையும், அவதூறுகளையும் பரப்புவதற்காகவே சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்களை வைத்துள்ளார்கள் என விமர்சனம் செய்த முதல்வர், அதிமுகவினர் எப்போதாவது கொள்கைகைளை பேசி பார்ததுதான்டா என்றும், அதிமுகவிற்கு கொள்கைகளே கிடையாது என்றும் எந்த பிரச்சனையிலும் கொள்கை சார்ந்த நிலைப்பாடு திமுகவினருக்கு கிடையாது என விமர்சித்தார். என்னதான் கத்தினாலும், கதறினாலும் நம்பலை கண்டுக்கவில்லை என்ற என்பது அடிமை கூட்டத்திற்கு புரிந்து விடும் என்றார்.

இப்ப கூட அண்ணா மன்னிப்பு கேட்பார் என அவதூறு கூறினார்கள், ஆனா அப்படி ஒரு சம்பவமே நடக்கலனு ஹிந்து நாளிதழ் தெரிவிச்சிடுச்சு, அதே போல திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மருதமலை கோவிலுக்கு மின்னிணைப்பை தரவில்லை என குற்றம்சுமத்தினார்கள், பாஜகவிற்கு பொய் சொல்வது வழக்கமாகிடுச்சு. நாம் எல்லாவற்றிக்கும் பதில் சொல்ல முடியுமா? நமக்கு நிறைய வேலைகள் இருக்கு- கள்ள கூட்டணியில் இருக்கு பாஜக - அதிமுகவிற்கு நீண்ட ஆயுட்காலம் இல்லை. 40'ப்பதும் நமதே'னு இல்லாம, நாடுமே நமதே'னு இந்தியா கூட்டணி வெற்றி பெற உழைக்கவேண்டும் என கூறி, பிரதமர் கூறிய பொய்களை பரப்புங்க என கேட்டுக்கொண்ட முதல்வர் முக ஸ்டாலின், கலைஞரின் நூற்றாண்டில் அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடரவேண்டும் என கேட்டுக்கொண்டு தனது உரையை முடித்தார்.