நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் 40'லும் வென்றாக வேண்டும்...முக ஸ்டாலின்..!!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40'யிலும் வென்றால் தான் நாடு நன்றாக இருக்கும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் உரை
இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரனின் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சபா ராஜேந்திரனை வாழ்த்தி பேசினார்.
நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.
நாற்பதும் நமதே நாடும் நமதே
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும் என கூறி, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையிலுள்ள 40 தொகுதிகளிலும் திமுக ஜெயித்தாக வேண்டும் என தெரிவித்தார்.
அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து அமையப்போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும் என சுட்டிக்காட்டி, நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொண்டு, "நாற்பதும் நமதே நாடும் நமதே" என்ற உறுதி எடுப்போம் என பேசினார்.